
திருநெல்வேலி: “பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்று கூறும் அன்வர் ராஜா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது அதிமுகவில்தான் இருந்தார், இப்போது என்ன பிரச்சினை அவருக்கு உள்ளது என தெரியவில்லை.” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது, தமிழகத்துக்கு வரும் பிரதமரை வரவேற்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.