
சென்னை: காலியிடம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி, உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், லயோலா கல்லூரியில் 18 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழக கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை லயோலா கல்லூரியில் 18 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 19 பேர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிடக் கோரி, கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.