
உடுமலை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உடுமலையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பங்கேற்கும் விழாவுக்காக தயார் செய்யப்பட்ட நேதாஜி மைதானம் மழையால் சேறும், சகதியுமாக மாறியது. அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கடந்த 15 நாட்களாகவே உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.