
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் இன்று (திங்கள்கிழமை) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாரணாபுரம் – அனுப்பங்குளம் சாலையில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு( பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.