
அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் ராஜாவின் பேட்டி வெளியாகி இருந்தது. அதில், “திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அன்வர் ராஜா, “தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று பதில் கூறியிருந்தார்.