
நாமக்கல்: கிட்னி விற்பனை செய்ததாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து, ஆடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி இடைத்தரகர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.