
சென்னை: பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழ்மொழி செழித்து வாழ்வதாகவும், ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்காக திட்டமிட்டு செயல்பட்டவர் ராஜராஜ சோழன் எனவும் ஆ.ராசா எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
பன்னாட்டு தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (தமிழ்நாடு), தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம் (அமெரிக்கா), ரஷ்யா தமிழ்ச் சங்கம் (ரஷ்யா), ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் (மலேசியா) ஆகியவை சார்பில் ‘பன்னாட்டு தொல்லியல் மாநாடு- 2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்தார்.