• July 21, 2025
  • NewsEditor
  • 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றம்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை இக்கூட்டத்தொடரில் தங்கள் தரப்பிலிருந்து எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் இது குறித்து பேசிய தம்பிதுரை, “தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்கிறது.

இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும், அவை சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

தம்பிதுரை

நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது. மாநில அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது.

தமிழகத்தில் காவல்துறை லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகளை நடத்திய தொல்பொருள் துறையின் அறிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரியிருக்கிறோம்.

அரசாங்கம் அதை வெளியிட வேண்டும். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *