
திருவாரூர்: திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார்.
இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்க வேண்டும் என கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.