• July 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அறியப்படுகிறது. அதன்படி உ.பி.யில் கன்வர் புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேற்று பிரயாக்ராஜில் உள்ள முஸ்லிம்கள் மலர் கொடுத்தும், மலர்களை தூவியும் வழியனுப்பி வைத்தனர்.

மத நல்லிணக்கத்துக்கு உதராணமாக உள்ள இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஸ்ரவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கங்கை நீரை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி யாத்திரை செல்கிறார்கள். இந்த யாத்திரையை பக்தர்கள் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு மேற்கொள்வார்கள். வரும் 24-ம் தேதி உடன் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *