
திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.முரளிதரன் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையிலான பிளவை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசி தரூர் தலைமை வகித்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் முரளிதரன் இதனை கூறியுள்ளார்.