
மும்பை: மகாராஷ்டிராவில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி, பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம், வஜாபூர் தாலுகாவில் உள்ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்சய் பகாரே என்பவர் சாமியாராக இருக்கிறார்.
தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடியும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்க செய்ய முடியும், ஆவிகளை விரட்ட முடியும் என்றெல்லாம் கூறி வந்துள்ளார்.