
லக்னோ: சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிர்சாபூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 3 கன்வர் யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர்.