
நாகப்பட்டினம்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று பழனிசாமி பேசியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நாகை மாவட்டம் உத்தம சோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைபணியை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே அறிவித்த பூதங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் வாஞ்சூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பூதங்குடியில் கட்டவேண்டிய தடுப்பணையை உத்தமசோழபுரத்தில் கட்டுவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.