
திருவாரூர்: 2019 மக்களவைத் தேர்தலின்போது திமுகவிடம் தேர்தல் செலவுக்காக மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியது. அதில் ஒரு சிங்கிள் டீ கூட கட்சித் தொண்டர் குடிக்கவில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினரை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.