• July 20, 2025
  • NewsEditor
  • 0

நத்தம்: நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தலக்கம்பட்டியில் கிராமமக்கள் பங்கேற்ற மீன்பிடித்திருவிழா இன்று (ஜூலை 20) நடைபெற்றது. திரளானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுக்குறிச்சி ஊராட்சியில் உள்ளது கருத்தலக்கம்பட்டி கிராமம். இங்கு 20 ஏக்கர் பரப்பில் சத்திரகண்மாய் உள்ளது. ஆண்டுதோறும் கண்மாயில் நீர்வற்றும்போது மீன்பிடித்திருவிழா நடத்துவது வழக்கம். இதையடுத்து தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் கிராமமக்களின் ஒற்றுமையை விளக்கும் வகையில் மீன்பிடித்திருவிழா நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சுற்றுப்புற கிராமமக்களுக்கும் மீன்பிடித்திருவிழாவில் கலந்துகொள்ள கருத்தலக்கம்பட்டி கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *