
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாமக தலைமை நிலைய செயலாளர் ம.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது சுட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.