• July 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ரிஜிஜு, “அவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை. நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *