
கொச்சி: ‘கட்சிகள் எப்போதும் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா இறந்தால் யார் வாழமுடியும்? என்ற ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசிதரூர் தலைமை வகித்தார். இதனால் அவர்மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.