
சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணு வர்த்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்கு தாரரான ராம கிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.55 கோடி அபராதம் விதித்தும் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதேபோல இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வங்கியின் தலைமை மேலாளர் சுப்பு ராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.