
மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 31,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு காரணமாக இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.