• July 20, 2025
  • NewsEditor
  • 0

“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும் குடுக்காமலேயே மீதி இருக்கிற ஒன்னரை வருசத்தையும் ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. எல்லா கணக்கும் எங்கக்கிட்ட இருக்கு; எங்கள ஏமாத்த முடியாது” திருப்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் தான் இப்படி தங்கள் கட்சி சேர்மனுக்கு எதிராகவே ‘கட்டிங்’ பிரச்சினையை எழுப்பி நகர்மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வைத்திருக்கிறார்கள்.

36 வார்​டு​களைக் கொண்ட திருப்​பத்​தூர் நகராட்​சி​யில் திமுக கவுன்​சிலர்கள் சேர்​மனுடன் சேர்த்து 29 பேர் உள்ளனர். அதிமுக-வுக்கு 5 கவுன்​சிலர்​களும் காங்​கிரஸ், பாமக-வுக்கு தலா ஒரு கவுன்​சிலரும் இருக்​கிறார்​கள். நகர்​மன்றத் தலைவராக சங்கீதா வெங்​கடேஷ் இருக்​கிறார். தொடக்​கத்​தில் இருந்தே திமுக கவுன்​சிலர்​களால் சங்கீ​தாவுக்கு தலைவலி​தான். எந்தப் பணியைத் தொட்​டாலும் அதில் ‘தங்​களுக்​கானது’ தட்டாமல் வரவேண்​டும் என திமுக கவுன்​சிலர்கள் சிலர் கறாராக இருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *