
புதுடெல்லி: 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்காவில் 21-வது உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற போலீஸாருக்கு பாராட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.