• July 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மூத்த மகன் மு.க.​முத்து கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அரசி​யல் கட்சி தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி – பத்​மாவதி தம்​ப​திக்கு பிறந்​தவர் மு.க.​முத்​து(77). இவர் கருணாநி​தி​யின் மூத்த மகன் ஆவார். வயது மூப்பு காரண​மாக ஏற்​பட்ட உடல்​நலக் குறை​வால் சென்னை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மு.க.​முத்து சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், நேற்று காலை கால​மா​னார். இதையடுத்​து, அவரது உடல் அஞ்​சலிக்​காக ஈஞ்​சம்​பாக்​கத்​தில் உள்ள இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டது. திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தனது அண்​ணனின் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *