
புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கும் டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருப்பது, இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள கருத்து இடைவெளியை குறைக்கும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பஹல்காம் தாக்குதலுக்கு உரிமை கோரிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தை இது பாகிஸ்தானுக்குக் கொடுக்கும்.