
மயிலாடுதுறை: “என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?” என்று மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறியதால், தற்போது என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நான் தவறு செய்து இருந்தால், அப்போதே என்னை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றமாக உள்ளது.