
புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த உண்மையை தேசம் அறிய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? தேசம் அதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே ட்ரம்ப்பின் பேச்சையும் டேக் செய்துள்ளார்.