
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.