• July 19, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

மேலும் இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலின் முன்புள்ள கடற்கரை, பிரகாரம் பகுதி மற்றும் வள்ளி குகை போன்ற பகுதிகளையும் கண்டு ரசிப்பது வழக்கம். 

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ரூ.200 கோடி மற்றும் தமிழக அரசின் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில், திருக்கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருந்திட்ட வளாகப் பணிகள் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

வள்ளி குகை

இந்தத் திட்டத்தின் கீழ் கோயிலின் அருகேயுள்ள வள்ளி குகையும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 7-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்தது.

ஆனால், அந்தச் சமயத்தில் இந்த வள்ளி குகை பராமரிப்புப் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பக்தர்கள் வள்ளி குகையைப் பார்க்கவும் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் குகையின் உள்ளே முருகன் மற்றும் வள்ளி புராணத்தைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகள், முருகன் வயதானவர் போன்ற தோற்றம், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குகையின் முன் 24.5 அடி நீளமும். 21.5 அடி அகலமும் கொண்ட 16 தூண்களுடன் கூடிய மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குகையின் வழியாக ஒரு குறுகிய பாதை மண்டபத்தையும் கருவறையையும் இணைக்க இருந்தது. தற்போது கூடுதலாக கிழக்கு நோக்கி புதிதாக ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

வள்ளி குகை
வள்ளி குகை

இதனால் ஒருவழியாக பக்தர்கள் சென்று மறுவழியில் பக்தர்கள் வெளியே வரலாம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த வள்ளி குகை மீண்டும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

வள்ளி குகையில் அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் சந்தன மலையின் அருகில் நின்று குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு வள்ளி குகைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *