
திருவாரூர்: “திமுகவுடன் 2019 தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்காக திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது, அதில் ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டன் குடிக்கவில்லை,” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக மாநில பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கம்யூனிஸ்ட்களை மிகக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.