• July 19, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்​டத்​தில் உள்​ளது இஸ்​லாம்​பூர். இந்​தப் பகு​தி​யின் பெயரை மாற்ற வேண்​டும் என்று இந்​துத்​துவா அமைப்​பான ஷிவ் பிர​திஸ்​டான் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர சட்​டப்​பேரவை மழைக்​கால கூட்​டத் தொடரின் கடைசி​நாள் அலு​வல்​கள் நேற்று நடை​பெற்​றன. அப்​போது, உணவு மற்​றும் சிவில் சப்​ளைஸ் துறை அமைச்​சர் சாகன் புஜ்​பால் பேசும்​போது, ‘‘சாங்லி மாவட்​டத்​தில் உள்ள இஸ்​லாம்​பூர், ஈஸ்​வர்​பூர் என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது மத்​திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்​பப்​படும்’’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *