
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனது அலுவலகத்துக்குகாவல் துணைக் கண்காணிப்பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் சுந்தரேசன் பணியாற்றி வருகிறார்.
சட்டவிரோத மது, சாராயம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது இவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவரது வாகனத்தை பறித்துக் கொண்டதால், டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.