
சென்னை: நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது என்றும் மக்களின் குடியிருப்பு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீப காலமாக நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல வழக்குகளைத் தொடுப்பதும் நீதிமன்றம் அத்தகைய குடியிருப்புகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென தீர்ப்பு எழுதுவதும் வழக்கமாகி வருகிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதாதவர்களும், கவலைப்படாதவர்களும் எவரும் இருக்க முடியாது.