• July 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்” என சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

மதுரையில் இதுகுறித்து அவர் கூறியது: “ஸ்டாலினின் திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மீண்டும் ஒரு பொய் அஜெண்டாவோடு தயாராகி வருகிறது. 4 ஆண்டுகளாக எதையும் நிறைவேற்றாமல் தற்போது மனுக்களை வாங்கி வருகிறார்கள். திமுக அரசு மீது மக்கள் கொதித்துப்போய் உள்ளார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களையும், பொது மக்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *