
சென்னை: “கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி – நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.” என திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (18-07-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.