
பாட்னா: பிஹாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிஹாரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடையே கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் 33 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்னல் தாக்குதல்களில் அதிகளவில் உயிரிழந்தனர்