
அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் எல்லையை ஒட்டி மியான்மரின் சின் மாநிலம் உள்ளது. இங்கு சிஎன்டிஎப், சிடிஎப் ஆகிய இரு ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் இந்திய எல்லையை ஒட்டி வசிக்கும் 3,700-க்கும் மேற்பட்டோர் மிசோரம் மாநிலத்தின் 3 கிராமங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் இரு கிளர்ச்சிக் குழுக்கள் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 2,962 மியான்மர் அகதிகள் தங்கள் நாடு திரும்பி விட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.