
பாட்னா: பிஹார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது பல கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் பக்ஸர் சிறையிலிருந்து பகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவர் சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையறிந்த இவரது எதிரணியைச் சேர்ந்த கும்பல், மருத்துவமனையிலேயே இவரை சுட்டுக் கொல்ல திட்டமிட்டது.