
கோவை: தெற்கு ரயில்வே சார்பில் கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் ஜூலை 17-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.