
சென்னை: தொழில்நுட்ப மேம்பாட்டு பணி காரணமாக, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் ஆக.3, 4 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று சென்னை நகர அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.