
பாட்னா: பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹாரில் மின்சார கட்டணம் ஏற்கெனவே குறைவாக உள்ளது.