
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கவும், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய 5 இடங்கள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.