
லக்னோ: சட்டவிரோத மதமாற்றத்தில் நடைபெறும் நிதி முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேசம், மும்பையில் 14 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரிமுல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்கூர் பாபா என அழைக்கப்படுகிறார்.
இவரது தலைமையிலான குழுவினர் பல்ராம்பூரில் உள்ள சந்த் அவுலியா தர்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் மிகப் பெரிய கூட்டங்களை அடிக்கடி கூட்டி சட்டவிரோத மதமாற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த கூட்டத்தில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பங்கேற்கின்றனர்.