
மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி 83-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு முறைகேட்டால் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.