
அரக்கோணம்: காஞ்சிபுரம் – அரக்கோணம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தர்மராய ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் வீட்டிலேயே கார் பழுது பார்க்கும் பணிமனை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20).
இந்நிலையில், வெங்கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோருடன் காரில் கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து மீண்டும் அரக்கோணம் திரும்பினர்.