
புதுடெல்லி: இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள், பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. இன்டர்போல் உதவியுடன் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு நீதியின் முன்பு நிறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்படுகிறது. இதன்படி 195 நாடுகளில் குற்றவாளிகள் தீவிரமாக தேடப்படுவார்கள். எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளனர் என்பது இன்டர்போல் உதவியுடன் கண்டுபிடிக்கப்படும். இதன்பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்த சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் பதுங்கி இருந்த 134 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.