• July 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வில் குற்​றச் செயல்​களில் ஈடு​படும் சமூக விரோ​தி​கள், பொருளா​தார குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​வது அதி​கரித்து வரு​கிறது. இன்​டர்​போல் உதவி​யுடன் அவர்​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​கின்​றனர்.

இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் கூறிய​தாவது: வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​லும் குற்​ற​வாளி​கள் குறித்து இன்​டர்​போல் உதவி​யுடன் சிவப்பு நோட்​டீஸ் வெளி​யிடப்​படு​கிறது. இதன்​படி 195 நாடு​களில் குற்​ற​வாளி​கள் தீவிர​மாக தேடப்​படு​வார்​கள். எந்த நாட்​டில் குற்​ற​வாளி​கள் பதுங்கி உள்​ளனர் என்​பது இன்​டர்​போல் உதவி​யுடன் கண்​டு​பிடிக்​கப்​படும். இதன்​பிறகு சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த சட்​டரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும். கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு நாடு​களில் பதுங்கி இருந்த 134 குற்​ற​வாளி​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *