
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு போலி சான்றிதழ் மூலம் விண்ணப்பித்த 20 மாணவர்கள் 3 ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.25 கோடியில் நவீன கலையரங்கம், ரெட்டிக்குப்பம் சாலை, கோடம்பாக்கம் சாலையில் ரூ.3.55 கோடியில் மழைநீர் கால்வாய், திடீர் நகரில் ரூ.61 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 6 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஆன்லைனில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய சான்றிதழ்களை இணைக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.