
சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வரும் ஜூலை 24 வரை காலக்கெடு விதித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.