• July 18, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாநில நகராட்சி நிர்வவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்தில் நேற்று பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *