
சென்னை: “காமராஜர் குறித்த சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?. அதைவைத்து அவதூறு வீசுவது யார்?. அந்த அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று. நடிக்காதீங்க ஸ்டாலின்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கல்விக்கண் திறந்த காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.